தந்தையிடம் எடுத்துச் சொல்லுங்கள் – மரினா மகாதீருக்கு நெட்டிசன்கள் அறிவுறுத்து

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாக்கிர் நாய்க்கின் மலேசிய இந்துக்களின் விசுவாசம் மற்றும் சீனர்களை விருந்தாளிகள் என கூறிய விவகாரத்தில் அவரைக் கண்டித்துள்ள மரினா மகாதீருக்கு வலைத்தளவாசிகள் பலர், இது குறித்து உங்கள் தந்தையிடம் எடுத்துச் சொல்லுங்கள் என அறிவுறுத்தியுள்ளனர்.

தனது டுவிட்டர் பக்கத்தில், “இது எங்கள் குடும்பம். இதைப்பற்றி பேச நீங்கள் யார்” என ஸாக்கிரை கண்டித்து சமூக ஆர்வலர் மரினா மகாதீர் கருத்து பதிவிட்டிருந்தார்.

இவரது பதிவினைப் பார்த்த பல சமூக வலைத்தள வாசிகள் “நீங்கள் உங்கள் தந்தைக்கு எடுத்துக் கூறுங்கள். தேர்தல் பிரச்சாரத்தின் போது, நீங்களும் பாடாங் கோத்தாவிற்கு வந்தீர்கள்தானே? அங்கு பார்க்கவில்லையா மலாய்,இந்தியர் மற்றும் சீனர்கள் ஒன்றுபட்டு ஆதரவு வழங்கியதை. ஆனால் எங்கிருந்தோ வந்த ஒருவர் அந்த ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு உங்களின் தந்தை ஆதரவு வழங்கி வருகிறார்” என கருத்து பதிவிட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here