இயோ பீ இன்-புகைமூட்டப் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்

பெட்டாலிங் ஜெயா– நாட்டின் புகை மூட்டப் பிரச்சினையைக்களைய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுத்து வருவதாக எரிபொருள், அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவகால மாற்ற அமைச்சர் இயோ பீ இன் தெரிவித்தார்.

தீபகற்ப மலேசியாவில் புகை மூட்டம் ஏற்படும் இடங்களைக் கண்டறிவதோடு செயற்கை மழையை உருவாக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.அவர் மேலும் கூறும்போது, புகை மூட்டத்தைக் கட்டுப்படுத்த இந்தோனேசியாவுடனான அரச தந்திர முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் இந்தோனேசியாவுக்கு உதவ மலேசியா முன் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட அரசு ஏஜென்சிகள் பிரச்சினைக்குத் தீர்வைக் காண 24 மணி நேரமும் உழைத்து வருவதாக அவர் தெரிவித்தார்.இந்தோனேசிய அமைச்சர் சித்தி நுர் பாக்கார், புகை மூட்டத்துக்குத் தமது நாடு காரணமாக இல்லை என்றும் அது தீபகற்ப மலேசியாவில்தான் ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு புகைச்சலைக் கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here