கிள்ளான், மார்ச் 12-
பார்வையாளர்களின் வருகை குறிப்பிட்ட காலம் வரையில் கட்டுப்படுத்துவதாக கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை அறிவித்துள்ளது.
பரவி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக பார்வையாளர்களின் வருகை கட்டுப்படுத்தப்படுகிறது.
கடுமையான தொற்றுக் கிருமிகள் இருப்பதால் பார்வையாளரர்களிடமிருந்து நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியமாகிறது என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.