காராக் –
கோவிட் – 19 உயிர்கொல்லி வைரஸ் தொற்று நோய் நோயாளிகள் மற்றும் காராக் அரசாங்க பொது கிளினிக்கில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பரவாமல் இருப்பதற்கு கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்தும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
வழக்கம்போல் இன்று திங்கட்கிழமை வெளி நோயாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அவசரப்பிரிவு சிகிச்சை விபத்துகள் தொடர்பான சிகிச்சைக்கு பெந்தோங் அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட சுகாதார இலாகா கேட்டுக்கொண்டுள்ளது.