நடைமுறைத் திட்டங்களை தேசிய பாதுகாப்பு மன்றமே அறிவிக்கும்

புத்ராஜெயா, ஏப்ரல் 8-

மக்கள் கூடல் இடைவெளி குறித்த நடவடிக்கையில் மாநிலங்கள் , மாநிலங்களின் வட்டார நடவடிக்கை மன்றங்கள் சொந்த முடிவுகளைக் கொண்டிருக்கக் கூடாது .

மாநிலங்களின் நடவடிக்கைகள் யாவும் தேசிய அளவிலான முடிவுகளைப்பின் பற்றியே செயல்படவேண்டும் என்று தற்காப்புத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு நடவடிக்கை மன்றத்திற்கு மட்டுமே கூடல் இடைவெளி தொடர்பான நடவடிக்கைகளூக்குத் திட்டங்கள் வகுக்க முடியும் என்றார் அவர்.

இது மற்ற சாதாரண நடவடிக்கை கணக்கில் கொரொனா -19 பிரச்சினையைக் கையாளக்கூடாது. இக்காலக்கட்டத்தை நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு என்ற கோணத்தில் பார்க்கவேண்டும்.

அவசியம் கருதி வணிக நடவடைக்கைகள் முடக்கபடுவது குறித்தும் தேசிய பாதுகாப்பு மன்றமே முடிவெடுக்க முடியும்.

நோக்கம் வலுவாக இருப்பதால் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. கொரொனா -19 தொற்று எண்ணிக்கை குறைக்கப்படவேண்டும் என்பதே!

மக்களின் தேவை அவசியம் கருதியும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

அதில் கார் பட்டறைகள், பட்டறைகளுக்குத் தேவையான பொருட்கள் விற்பனை ஆகிவற்றுக்கு காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மட்டுமே நேரம் வழங்கப்பட்டிருக்கிறது.

கொரோனா-19 ததைத்தடுக்கும் முயற்சியில் ஒரு கிராமம் பாதிக்கப்பட்டிருக்குமானால் 5 கிலோ சுற்றளவில் உள்ள மற்ற கிராமங்களும் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்ற நிபந்தனைகளை சுகாதாரப்பிரிவு பரிந்துரைக்கலாம் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here