ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் பலி..

அதிரும் நாடுகள்

ஜெனிவா –

சீனாவில் ஹூபே மாகாணம் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

உலகம் முழுவதும் இதுவரை 18 லட்சத்து 41 ஆயிரத்து 123 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 13 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 479 பேர் பலியாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here