சிரம்பான், ஏப்.14-
சிரம்பான் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு திடீரென உயர்ந்திருப்பதாக சுகாதார இலாகா அறிவித்துள்ளது.
இன்று மட்டும் 41 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த திடீர் உயர்வு கவலையளிக்கும் விதத்தில் இருப்பதாக சுகாதார இலாகா தெரிவித்துள்ளது.
சிரம்பானை சுற்றியுள்ள 26 வட்டாரங்களிலும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.
நேற்று 219 என்றிருந்த நிலை இன்று 226 என உயர்வு கண்டுள்ளது.