மெர்சிங் :இங்குள்ள கம்போங் சாவா டத்தோ அருகே உள்ள ஜாலான் மெர்சிங்-எண்டோவில் உள்ள ஒரு வீட்டின் சமையலறையில், எதிர்பாராத விதமாக எட்டு வயது மதிக்கத்தக்க சிறுவனின் கைவிரல் சிக்கிக்கொண்டது. இத்தகவலைப்பெற்ற தீயணைப்பு வீரர்கள் குழு விரைந்து வந்து அச்சிறுவனை மீட்டது.
திங்கள்கிழமை (ஏப்ரல் 20) இரவு 11.36 மணியளவில் தங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததாக மெர்சிங் தீயணைப்பு, மீட்புத் துறை நிலையத் தலைவர் மொஹமட் அஸ்ஹாரி அல்வி தெரிவித்தார்.
தனது மகனின் ஆள்காட்டி விரல் சமையலறையின் ஒரு பகுதியில் சிக்கியிருப்பதைக் கண்ட அச்சிறுவன்மின் தாயார் செய்வதறியாது தீயணைப்புத் துறையை நாடினார்.
சிறுவன் தூக்கத்திலிருந்து கழிப்பறைக்குச் சென்றான். பின்னர் அவன் ஆள்காட்டி விரலால் பொறியில் இருந்து எதையாவது அகற்ற முயன்றான், அதில் அவனின் விரல் சிக்கிக்கொண்டது என்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) அவர் கூறினார்.
சிறுவனை காப்பாற்ற 15 பணியாளர்களுடன் சென்றதாக மொஹமட் அஸ்ஹாரி கூறினார்.
சிறுவனின் ஆள்காட்டி விரல் விடுவிக்கப்படுவதற்கு முன்பு ஓர் உலோகத்திலான பொருள் பாதுகாப்பாக வெட்டப்பட 15 நிமிடங்கள் ஆனது. அதிகாலை 12.07 மணியளவில் இது நிகழ்ந்தது என்று அவர் கூறினார், சோதனையின் போது சிறுவன் காயமடையவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி.