ஈப்போ:
இங்குள்ள ஜலான் துன் அப்துல் ரசாக்கில் உள்ள ஒரு வாழை இலை உணவகத்தில் இரவு உணவு ,மது அருந்தியதற்காக 10 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி ஏ.அஸ்மதி அப்துல் அஜீஸ் கூறுகையில், 19 முதல் 44 வயதுடைய ஆண்கள் போலீஸ் சிஐடி குழுவினரால் இரவு 8.50 மணியளவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஈப்போ பாராட்டில் மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டுக்கான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், கதவைத் திறப்பதற்கு முன்பு உணவகத்தில் இருந்து உரத்த சத்தம் கேட்டதுடன், 10 ஆண்கள் மது அருந்துவதையும், சாப்பிடுவதையும் கண்டறிந்தனர்
அவர்களது வீடு கடையில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் அமைந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது, மேலும் உணவகத்தின் வணிக உரிமத்தையும், மதுபானத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.