குடியிரிமை கோருகிறதா ரோஹிங்யா? மறுக்கிறார் அமைப்பின் தலைவர்

பெட்டாலிங் ஜெயா, ஏப்.24-

ரோஹிங்கியா சமூகத்திற்கு குடியுரிமை கோரியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை மியான்மார் இன ரோஹிங்கியா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் மலேசியா (மெர்ரோம்) ஜாபர் அஹ்மத் அப்துல் கனி மறுத்துள்ளார்.

ஒரு பத்திரிகை அறிக்கையுடன், ஜாபர்  வீடியோ காணொளியில் இப்பிரச்சினை குறித்து உரையாற்றினார்.

சமூக ஊடகங்களிலும் வாட்ஸ்அப் மூலம் அச்சுறுத்தல்களையும் அவமானங்களையும் பெற்றதாக அவர் கூறினார்.

இந்த குற்றச்சாட்டுகள் ரமலான் காலத்தில் பரவி வருவதால் மிகவும் ஏமாற்றமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டது

இந்த குற்றச்சாட்டுகளை நான் மறுத்துவிட்டேன் . இந்த தவறான புரிதல்களை உடனடியாக நிறுத்த முடியும்  என்று நம்புவதாக காணொளியில்  ஜாபர் கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு, ரோஹிங்கியாக்களுக்கு முழு மலேசிய குடியுரிமையை கோரப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் பரவலாக் பகிரப்பட்டன. இது ரோஹிங்கியா சமூகத்திற்கு எதிராக நெட்டிசன்கலின்  தாக்குதல்கள் என்றார் அவர்.

இதில்,உண்மை இல்லை என்று ஜாபர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here