ஈப்போ –
உலக மக்களை கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இன்று விசாக தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகத்தில் வாழும் புத்த மதத்தினர் பெரிய அளவில் கொண்டாடும் இந்த விழா இவ்வாண்டு கொரோனா வைரசினால் கொண்டாட்டங்கள் தடைப்பட்டு உள்ளன.
ஈப்போவில் விசாக தினத்தை மிகப் பெரிய அளவில் கொண்டாடும் ஆலயங்கள் சில வெறிச்சோடிக் கிடக்கின்றன.
ஜாலான் கோல கங்சாரில் உள்ள புத்தர் ஆலயம், ஜாலான் தம்பூனில் உள்ள வாட் ஸ்ரீ புண்ய மகரம், ஈப்போ கார்டனில் உள்ள புத்தர் ஆலயம் ஆகியவை எந்த விதக் கொண்டாட்ட ஏற்பாடுகளும் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.