கெடா மாநில மந்திரி பெசார் பங்கேற்பின் ஒத்திகையில் பங்கேற்றார் கெடா சுல்தான்

அலோர் ஸ்டார்: கெடா மாநில அரசாங்கத்தின் உடனடி மாற்றம் குறித்த நடவடிக்கைகளின் சலசலப்பு சனிக்கிழமை (மே 16) தொடர்கிறது.  அதே நேரம் புதிய மந்திரி பெசார் பதவியேற்புக்கான ஒத்திகை உட்பட பல நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

மாநில நிர்வாகக் கட்டடமான விஸ்மா டாரூல் அமானில், காலை 8 மணி முதல் வெளியில் போலீஸ் பட்டாளத்தை காண முடிந்தது. காலை 10.55 மணியளவில், மே 17 ஆம் தேதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவின் ஒத்திகையில் கலந்து கொள்ள கெடா சுல்தான் சல்லாஹுதீன் இப்னி அல்மர்ஹம் சுல்தான் பத்டிஷா வந்திருந்தார்.

தலைநகரில் நடைபெற்று வரும் மற்றொரு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 17) திட்டமிடப்பட்டிருந்த சரிகாட் ஆயர் டாரூல் அமன் எஸ்.டி.என் பி.டி ஹாலில் நடந்த கெடா வாட்டர் ஹீரோ விருது வழங்கும் விழா சனிக்கிழமை நண்பகலுக்கு மாற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியை டத்தோஶ்ரீ முக்ரிஸ் மகாதீர் வழி நடத்தவிருந்தார். ஆனால் தற்பொழுது நிலவரப்படி  மாநில அறிவியல், புதுமை, தகவல் தொழில்நுட்பம், பொதுப்பணித்துறை, நீர் வழங்கல் மற்றும் மூல மற்றும் எரிசக்தி  குழுவினர்   இந்த நிகழ்வை நடத்துவார்கள் என டத்தோ ஜம்ரி யூசுப் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு விஸ்மா டாரூல் அமானில் முக்ரிஸ் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கெடா அமனா தலைவர் டத்தோ பஹ்ரோல்ராஜி மொஹமட் சவாவி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here