நான்காவது மாடியிலிருந்து வீசப்பட்ட சிசு தீவிரப் பிரிவிலிருந்து சாதாரண பிரிவுக்கு மாற்றம்

ஜார்ஜ் டவுன், மே 19-

சொந்தத் தாயாரால் நான்காவது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பச்சிளம் சிசு தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது உடல் நிலை மேம்பட்டு வருவதால் அவர் சாதாரண பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டிருப்பதாக பினாங்கு பொது மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, 3,25 கிலோ கிராம் எடை கொண்ட சிசு கடந்த 13ஆம் தேதி பெர்சியாரான் மாயாங் பாசிர் 5இல் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் 4ஆவது மாடியிலிருந்து வீசப்பட்ட சிசுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறித்து பாராட் டாயா காவல் துறைத் தலைவர் சூப்பிரிடெண்டன்ட் ஏ,ஏ அன்பழகன் மருத்துவமனைக்குச் சென்று கவனித்து வருகிறார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாயாரும் 18 வயது நிரம்பிய மற்றொரு ஆடவரும் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here