MCO மீறல் – கேளிக்கை மையத்தில் இருந்த 29 பேர் கைது

ஈப்போ:  எம்.சி.ஓ வை மீறியதற்காக இங்குள்ள  ஜாலான் லாவ் ஏக் சிங்கில் உள்ள ஒரு  கேளிக்கை மையத்தில் இருந்த 29 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதன்கிழமை (மே 27) அதிகாலை 12.25 மணியளவில் காவல்துறையினர் வளாகத்தின் கதவைத் தட்டியபோது கைது செய்யப்பட்டவர்களில் ஒரு மதுக்கடை மற்றும் 28 வாடிக்கையாளர்களும் அடங்குவதாக ஈப்போ மாநில காவல்துறைத் தலைவர் ஏசிபி ஏ. அஸ்மதி அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.

நாங்கள் அங்கு சென்றபோது, ​​கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டோம். கேளிக்கை மைய பொறுப்பாளர்களை அழைக்க  நாங்கள் பல முறை கதவைத் தட்டினோம். அங்கு மூன்று பெண்கள் அடங்கிய வாடிக்கையாளர்கள் தங்களை மகிழ்வித்து, மது அருந்து வருவது கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் கேளிக்கை மையங்கள்  இயங்க அனுமதிக்கப்படவில்லை என்பதையும், அங்கு எந்த கூட்டங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன என்பதையும் அறியவில்லை என்று அவர் கூறினார்.

தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் விதிமுறை 2020 இன் விதி 15 ன் கீழ் மற்றும் தொற்று நோயை பரப்பக்கூடிய ஒரு கவனக்குறைவான செயலுக்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 269 ன் கீழ் இந்த விவகாரம் விசாரிக்கப்படும் என்றார். அவர்களின் தடுப்பு காவல் இன்று புதன்கிழமை முதல்  தொடங்கும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here