மலேசியாவில் இன்று 30 பேர் கோவிட் 19 நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இன்று வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,762ஆக உயர்ந்துள்ளது என மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் இஷாம் தெரிவித்தார்.
இன்று பதிவான 30 பாதிப்புகளில் 3 வெளிநாடுகளிலிருந்து ஏற்பட்ட தொற்றாகும். 17 அந்நிய பிரஜைகளுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றாகும். 10 பாதிப்புகள் மட்டுமே மலேசியர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகும்.
மொத்தம் 1,317 பேர் சிகிச்சை பெற்று வரும் வேளையில் 9 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வேளையில் இருவருக்கு சுவாச உபகரணங்கள் தேவை படுகின்றனர்.
இதனிடையே 95 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,330 ஆக பதிவாகியுள்ளது. மரண எண்ணிக்கை 115ஆகவே நீடிகிறது.