கோவிட் 19- இன்று 30 பேர் பாதிப்பு

மலேசியாவில் இன்று 30 பேர் கோவிட் 19 நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இன்று வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,762ஆக உயர்ந்துள்ளது என மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் இஷாம் தெரிவித்தார்.

இன்று பதிவான 30 பாதிப்புகளில் 3 வெளிநாடுகளிலிருந்து ஏற்பட்ட தொற்றாகும். 17 அந்நிய பிரஜைகளுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றாகும். 10 பாதிப்புகள் மட்டுமே மலேசியர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகும்.

மொத்தம் 1,317 பேர் சிகிச்சை பெற்று வரும் வேளையில் 9 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வேளையில் இருவருக்கு சுவாச உபகரணங்கள் தேவை படுகின்றனர்.

இதனிடையே 95 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,330 ஆக பதிவாகியுள்ளது. மரண எண்ணிக்கை 115ஆகவே நீடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here