பாரம் பகுதியில் 5 நாட்களுக்கு முன்னதாக காணாமல்போன 51 வயது ஆடவர் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டார். லோங் காபுங் பகுதியில் பலவீனமான நிலையில் இருந்த அந்த ஆடவர் உடனடியாக மருத்துவப் பரிங்சோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சரவாக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப்படையின் துணைத் தலைமைச் செயல் இயக்குநர் தியோங் லிங் ஹி தெரிவித்தார்.