கோவிட் 19 இன்று 277 பேர் பாதிப்பு

கோவிட் 19 பெருதொற்றுக்கு இன்று 277 பேர் இலக்காகியுள்ளனர்.

அதில் 2 வெளிநாடுகளிலிருந்து ஏற்பட்ட தொற்றாகும். 271 பாதிப்பு வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றாகும். 4 பாதிப்புகள் மட்டுமே மலேசியர்களுக்கு ஏற்பட்டதாகும் என சுகாதார துறை அமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் இஷாம் கூறினார்.

இன்று மொத்தம் 28 பேர் குணமடைந்திருக்கும் வேளையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,559ஆக பதிவாகியுள்ளது. மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 8,247ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் 1,573 பேர் சிகிச்சை பெற்று வரும் வேளையில் அறுவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கு சுவாச உபகரணங்கள் தேவை படுகின்றன.

14ஆவது நாளாக மரண எண்ணிக்கை 115ஆகவே நீடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here