நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட நாள் தொடங்கி மலாக்கா கடற்கரையில் அதிகமான ஆமைகள் கரை ஒதுங்கியுள்ளன. இந்தக் காலகட்டத்தில் மட்டும் 182 ஆமைகள் இக்கடற்கரையில் ஒதுங்கிகயுள்ளதாக மாநில மீன்வள இலாகா துணைத்தலைவர் நவா அப்துல் கரீம் தெரிவித்தார். குறிப்பாக அவை முட்டையிட இங்கு வருவதாகவும் அவர் கூறினார்.