ஜார்ஜ் பிளாய்டு கொலை: அமெரிக்க போலீஸ் அதிகாரிக்கு நிபந்தனை ஜாமீன்

அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்டு (வயது 46) என்ற கருப்பு இனத்தவர், கடந்த 25-ந் தேதி போலீசார் பிடியில் கொலை செய்யப்பட்டது, கருப்பு இன மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கருப்பு இனத்தவர் ஜார்ஜ் பிளாய்டு கொலையில் முக்கிய குற்றவாளி டெரெக் சவ்வின் மற்றும் தொடர்புடைய 3 போலீஸ் அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

4 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் சிறைச்சாலையில் இருக்கும் சவ்வின்வர் ஜாமீனில் வெளியே வர முயற்சித்து வருகிறார்.

இந்த நிலையில் ஹென்னெபின் கவுண்டி மாவட்ட நீதிமன்றம் அவரது ஜாமீனை நிபந்தனைகளுடன் 1 மில்லியன் டாலராகவும் (இந்திய மதிப்பில் ரூ.7.5 கோடி) நிபந்தனைகள் இல்லாமல் 1.25 மில்லியன் டாலராகவும் (இந்திய மதிப்பில் ரூ.9.5 கோடி) நிர்ணயித்து உள்ளது.

நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு அவர் தனது துப்பாக்கிகளை வேண்டும், சட்ட அமலாக்கத்தில் அல்லது எந்தவொரு பகுதியிலும் பாதுகாப்பில் ஈடுபடக்கூடாது, மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது, குடும்பத்துடன் தொடர்பு கொள்ளக்கூடாது போன்ற நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

குற்றச்சாட்டுகளின் தீவிரம் மற்றும் வழக்கின் வலுவான மக்கள் எதிர்வினை ஆகிய இரண்டின் காரணமாக அரசு வழக்கறிஞர் மத்தேயு பிராங்க் அதிக ஜாமீன் கேட்டுள்ளார்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை மீண்டும் ஜூன் 29 தேதி நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here