நாட்டின் சேவைகளில் முன்னணிப் பணியாளர்ளின் சேவை மதிக்கப்படவேண்டும் என்பது கோரிக்கை அல்ல, சாசனம். அதற்கான பெருமையத் தேடிக்கொடுத்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.
இவர்களுக்கு நன்றிக்கடனாய் என்ன செய்யலாம்? செய்வதற்கு நிறைய இருக்கின்றன, நிறையச்செய்ய முடியும். அதில் சம்பள உயர்வு கொடுக்கலாம். பதவி உயர்வு கொடுக்கலாம் தகுதி உயர்த்தலாம்.
இதெல்லாம் செய்வதற்கு மருத்தவப்பணியாளர்கள் தகுதியானவர்கள் என்பதை அரசும் ஒப்புக்கொள்ளும்.
ஒன்றுதான் முதனமையாக நிற்கிறது. அதுதான் தற்காலிகத்தை நிரந்தர மாக்குவது. இதைச் செய்தால் பெரிய நன்றியாக இருக்கும். இடம் மாற்றத்தையும் கவனிக்கலாமே!