வெளிநாட்டு மாணவர்கள் கல்வியை மேற்கொள்ளலாமா? நாளை முடிவு தெரிய வரும்

புத்ராஜெயா: கோவிட் -19 தொற்றுநோயை நிர்வகிப்பதற்கான சிறப்பு அமைச்சரவைக் குழு, வெளிநாட்டு மாணவர்கள் மலேசியாவுக்குத் திரும்பி வருவதற்கான  வாய்ப்பைப் பற்றி ஆராயும் என்று தற்காப்பு மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

கல்வியை  மீண்டும் தொடங்க மலேசியாவுக்கு திரும்பி வர அனுமதிக்குமாறு அனைத்துலக மாணவர்களிடமிருந்து அரசாங்கம் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது என்றார்.

இது குறித்து விவாதிக்க குழு நாளை கூடி, வெளிநாட்டு மாணவர்கள் மீது நிலையான இயக்க முறைமையை (எஸ்ஓபி) எவ்வாறு பயன்படுத்துவது என்பதை ஆராயும் என்றார். நாங்கள் SOP உடன் வர முடிந்தால், இதை வெள்ளிக்கிழமை அறிவிப்போம் என்று அவர் புதன்கிழமை (ஜூன் 17) ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கோவிட் -19 தொற்றுநோயால் நாட்டின் எல்லைகளை மூடுவதற்கான முடிவைத் தொடர்ந்து வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் அனைத்துலக  மாணவர்கள் எப்போது திரும்பலாம் என்று அமைச்சரிடம் கேட்கபட்டதற்கு அவர் மேற்கண்ட பதிலை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here