வேனில் சிக்கிக் கொண்டவர் காப்பாற்றப்பட்டார்

இங்குள்ள ஜாலான் சைட் புத்ராவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர் வேனிலேயே சிக்கிக் கொண்டார்.

இன்று மதியம் ஒரு மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் 70 வயது நிறைந்த ஒருவர் ஓட்டுனர் பகுதியில் சிக்கிக் கொண்டார். தகவல் அறிந்த ஹங் துவா தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த ஆடவரை காப்பாற்றினர். அவருக்கு ஏற்பட்டிருக்கும் காயங்களுக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here