விலகியது தடை

ஜூலை 1ஆம் தேதி முதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 250 பேர் வரை கூடலாம் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.  ஜூலை 1 முதல் பெரிய அளவிலான சமூக நிகழ்வுகளை அரசாங்கம் நிபந்தனையுடன் அனுமதிக்கும் என்று அவர் தெரிவித்தார். இதுபோன்ற நிகழ்வுகள் ஐந்து மணி நேரத்திற்கு மேல் நீடிக்கக்கூடாது. அதே நேரத்தில் பங்கேற்பாளர்களின் திறன் 250 பேருக்கு இருக்கும் என்று இஸ்மாயில் விளக்கினார்.

அனுமதிக்கப்படும் சமூக நிகழ்வுகளில் திருமணங்கள் அல்லது நிச்சயதார்த்த விழாக்கள், தஹ்லில், பிறந்தநாள் விழாக்கள்,  ஒன்றுகூடல் உள்ளிட்டவைகள் அடங்கும்  என்று அமைச்சர் புத்ராஜெயாவில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தினசரி கோவிட் -19 மாநாட்டில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here