சபாவில் வெள்ளம் – 1,210 பேர் பாதிப்பு

சபாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,210ஆக உயர்ந்துள்ளது.

375 குடும்பங்களைச் சேர்ந்த 1,210 பேர் 15 துயர் துடைப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

102 குடும்பங்களைச் சேர்ந்த 323 பேர் கோத்தா பெலுட்டில் உள்ள 4 துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 192 குடும்பங்களைச் சேர்ந்த 634 பேர் தெனோமில் உள்ள 8 துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதோடு, 20 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் பாப்பார் உள்ள 1 துயர் துடைப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் பெனம்பாங், பியோபோர்ட் ஆகிய இடங்களில் உள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 11 மாவட்டங்களில் 152 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்று மாநில பேரிடர் நிர்வாக குழு வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here