சிரம்பான் குனோங் பெரெம்பூன் மலைப்பகுதியில் மூன்று நடைப்பயணிகள் வழிமாறி காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களைத் தேடும்பணி தொடங்கியது.
நேற்று மாலை, அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை தீயணைப்புப் படையினர் அறிந்தனர். பின்னர் அம்மூவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்களில் காயமடைந்தவர் ஈ ஜியா ஜீ 21, என அடையாளம் காணப்பட்டார். மற்ற இரு ஆண்களும் 20 வயதுக்குட்பட்டவர்களாவர்.
நேற்று மாலை 5 மணியளவில் அவர்கள் காணாமல் போனது குறித்து அறியப்பட்டதாகவும் 10 தீயணைப்பு அதிகாரிகள், பணியாளர்களுடன் தேடுதல் நடத்தியதாகவும் தீயணைப்புப்படையின் அஹ்மட் முக்லிஸ் தெரிவித்தார்.