மலையேறிய மூவர் மீட்கப்பட்டனர்

சிரம்பான் குனோங் பெரெம்பூன் மலைப்பகுதியில் மூன்று நடைப்பயணிகள் வழிமாறி காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களைத் தேடும்பணி தொடங்கியது.

நேற்று மாலை, அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை தீயணைப்புப் படையினர் அறிந்தனர். பின்னர் அம்மூவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்களில் காயமடைந்தவர்  ஈ ஜியா ஜீ 21, என அடையாளம் காணப்பட்டார். மற்ற இரு ஆண்களும் 20 வயதுக்குட்பட்டவர்களாவர்.

நேற்று மாலை 5 மணியளவில் அவர்கள் காணாமல் போனது குறித்து  அறியப்பட்டதாகவும் 10 தீயணைப்பு  அதிகாரிகள்,  பணியாளர்களுடன் தேடுதல் நடத்தியதாகவும் தீயணைப்புப்படையின் அஹ்மட் முக்லிஸ் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here