மாணவர்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்த தோட்டக்கரார் கைது

சுக்காய்: கெமாமனில் உள்ள ஒரு பள்ளியின் பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அங்குள்ள மாணவர்களில் ஒருவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தற்காகவும் தோட்டக்காரர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். முகமூடி அணிந்த 32 வயது சந்தேக நபர், படுக்கைக்கு அடியில் இருந்து தலைமறைவாக வெளியே வந்து மூன்று மாணவர்களை அணுகிய சம்பவம் அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்ததாக கெமாமன் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுபன் ஹன்யன் ரம்லான் தெரிவித்தார்.

மாணவர்களை அமைதியாக இருக்கச் சொல்லி, அவரிடம் கத்தி இருப்பதாகக் கூறி, சந்தேக நபர் அவர்களின் தொலைபேசிகளைக் கேட்டு அவர்களில் ஒருவரின் தொடையைத் தொட்டார். மாணவர்களில் ஒருவர் உதவிக்காக கத்தியதைத் தொடர்ந்து அவர் தப்பி ஓடிவிட்டார் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) ஒரு அறிக்கையில் தெரிவித்தார். மற்றொரு  வழக்கில்  கடந்த வெள்ளிக்கிழமை ஆயர் ஜெர்னி ஜாலன் இபோக்கில் நடந்த சேவல் சண்டை  சூதாட்டத்தில்  இரண்டு இந்தோனேசியர்கள் உட்பட 28 சூதாட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். – பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here