இந்நிலையில் லவுரல் தானாகவே தனது திறமையை கொண்டு கோடீஸ்வரர் ஆகிவிட்டார் என்ற ஆச்சரிய தகவலை அவரின் தாய் லவுராய்கிஜி வெளியிட்டுள்ளார். அதாவது இன்ஸ்டாகிராம் இனுபுலியன்சர் மூலமே குழந்தை கோடீஸ்வரர் ஆகியுள்ளார். இது குறித்து லவுராய்கிஜி தனது பதிவில், இன்ஸ்டாகிராமில் அதற்குள் மிக பிரபலமாகி என் மகள் கோடீஸ்வரர் ஆகி தூதர் ஒப்பந்தத்தை பெற்றுள்ளார். என்னையே அதற்குள் அவர் முந்தி விடுவார் போல் இருக்கிறது, இந்த வயதிலேயே பெரிய வேலை தான் என பதிவிட்டுள்ளார். அதாவது லவுரா இன்ஸ்டாகிராமில் மிக பிரபலம் ஆகியிருக்கிறார். அவரின் மகள் புகைப்படங்களை வைத்து செய்யப்படும் விளம்பரங்களும் அதிகளவில் பகிரப்படும் நிலையிலேயே இந்த அதிர்ஷ்டம் அவருக்கு அடித்துள்ளது.