இன்று ஜூலை 31ஆம் தேதி கோவிட்-19 தொற்றினால் புதிதாக 12 பேர் பாதிக்கப்பட்டிருப்பதோடு ஒருவர் மரணமடைந்திருப்பதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் இஸாம் அப்துல்லா தெரிவித்தார்.
இதனால் மரணம் எண்ணிக்கை 125ஆக உயர்ந்துள்ளது. இன்று 27 பேர் குணமடைந்து இல்லம் திரும்பி இருப்பதாகவும் இது வரை மொத்தம் 8,976 பேர் பூரண குணமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.