ஜோகூர்பாரு: வாடிக்கையாளர்கள் தவறான விவரங்களை வழங்கி அதனால் அபராதம் செலுத்த வேண்டி வருமோ என்று கடைக்காரர்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் கவலை கொண்டுள்ளனர். எங்களால் வாடிக்கையாளர்களின் முழு விவரத்தையும் சோதிக்க இயலாது.
ஒரே நேரத்தில் அதிகமான வாடிக்கையாளர்கள் வரும்போது அவர்கள் தவறான தகவல்களை வழங்குகின்றனரா என்பதனை அறிய நேரமிருக்காது. மற்றொரு வர்த்தகர் கூறுகையில் வாடிக்கையாளர்கள் தங்களின் உண்மையான விவரங்களை வழங்கினால் அபராதம் கட்டும் அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம். பொதுமக்கள் கிஃயூஆர் அல்லது மைசெஜாத்ரா வழி தங்களின் விவரங்களை வழங்கலாம் என்றார்.