21 செம்மறி ஆடுகள் உயிரிழப்பா?

விழுப்புரம் அருகே மின்னல் பாய்ந்ததில் வீட்டில் கட்டி வைத்திருந்த 21 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே கண்ணாரம்பட்டு கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ச. அய்யனார் என்பவரின் வீட்டின் அருகே இடி மின்னல் பாய்ந்தது. இதனால் அங்கு கூரை அருகே கட்டி வைத்திருந்த 21 செம்மறி ஆடுகள், இடி மின்னல் தாக்கியதில் உயிரிழந்தன. இதுகுறித்து வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here