பிரேசிலில் மேலும் 447 பேர் பலி!

புதிதாக 14,521 பேருக்கு தொற்று உறுதி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,521 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 447 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பு 4,137,521 ஆகவும், உயிரிழப்பு 1,26,650 ஆகவும் உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் சுமார் 33 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்கிழக்கு மாகாணமான சாவ் பாலோவில் 8,56,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 31,353 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் நாட்டின் சுகாதார அமைச்சகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் உலக நாடுகள் பட்டியலில் பிரேசில் 3 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here