புதிய கல்விக் கொள்கையை ஆராய தமிழக அரசு சார்பில் குழு அமைப்பு

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து ஆராய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் 14 பேர் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கல்விக்கொள்கையை தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அமல்படுத்துவது குறித்து ஆராய, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ள இருமொழிக் கொள்கைக்கு பாதிப்பில்லாத வகையில், அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை 14 பேர் கொண்ட ஆராய்ந்து அறிக்கை தயார் செய்யும் என கூறப்பட்டுள்ளது. வல்லுநர் குழு ஓராண்டுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் குழுவிற்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வழங்குவார் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here