தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில அடுத்த 24 மணி நேரத்தில் வேலூர், திருவள்ளூர்,ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நீலகிர, ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய முதல் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை,ராணிப்பேட்டை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி சேலம், திருப்பத்தூர், கடலூர், நீலகிரி, மற்றும், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here