கார் கட்டுபாட்டை இழந்து மோதியதில் ஒருவர் பலி

ஈப்போ: சுங்கை போக்குவரத்து நெரிசலில் கார் மோதியதில் 26 வயது இளைஞன் உயிரிழந்தார். செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) காலை 11.45 மணியளவில் ஜாலான்  ஈப்போ-கோலாலம்பூரில் இந்த விபத்து நடந்ததாக தாப்பா  ஓசிபிடி துணை  ஆணையர் வான் அசாருடீன் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

“டிரைவர் முகமது அமிரூல் ஹக்கீம் ஆல்யா, மதியம் 12.40 மணிக்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு  சுங்கையில் இருக்கும் சுகாதார கிளினிக்கு  அனுப்பப்பட்டார்.  நூருல் முஸ்பிரா இஷாக் 25 காரில் இருந்த ஒரே பயணி, அவருக்கும் மார்பிலும் இடது காலிலும் காயம் ஏற்பட்டது.

“மேலதிக சிகிச்சையைப் பெறுவதற்காக அவர் ஸ்லிம் ரிவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்,” என்று அவர் கூறினார்.  தாப்ப மருத்துவமனையில் பிற்பகல் 3 மணிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

தஞ்சாங் மாலிமிலிருந்து தாப்பாவுக்கு சென்று கொண்டிருந்த கார், போக்குவரத்து விளக்கை தாண்டுவதற்கு முன்பு கட்டுப்பாட்டை இழந்தது என்று நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here