புதிய தலைமுறை முற்போக்கு அமைப்பின் ஏற்பாட்டில் பத்து வட்டாரத்தை சேர்ந்த 300 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள், ஒரு பெட்டி முகக்கவசம், கை தூய்மை ஆகியவற்றை வழங்கினார்.
புதிய தலைமுறை முற்போக்கு அமைப்பின் தலைவர் செல்வேந்திரன் கூறுகையில் முதல் முறையாக மூவின மக்களுக்கு இந்த உதவி வழங்கி இருப்பதாக கூறினார்.
பத்து வட்டாரத்தில் உதவிகள் வழங்கவிருப்பதாக பேனர் இருப்பதை பார்த்து அதிகமானோர் வருகை தந்ததாகவும் ஆனால் 300 பேருக்கு மட்டுமே வழங்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் அடுத்த முறை அனைவருக்கும் வழங்க முயற்சி செய்வோம் என்றும் எங்களுக்கு அரசாங்க மானியம் எதுவும் இல்லை என்றும் அனைத்து சொந்த செலவில் வழங்கியதால் 300 பேருக்கு மட்டுமே வழங்க முடிந்தது என்றார்.