குஜராத் கட்டிடம் இடிந்து விழுந்து…..

குஜராத் மாநிலம் வதோதராவின் பவமன்புரா பகுதியில் இன்று அதிகாலை புதிதாக கட்டிக்கொண்டு இருந்த மூன்று மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் இடைபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், மூன்று பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் கட்டிடத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் சேதமடைந்தன. இது குறித:து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்டிடம் 30 ஆண்டுகள் பழமையானது மற்றும் புதுப்பிக்கப்பட்டு வருவதாக உள்ளூரை சேர்ந்தவர்கள் தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here