பட்ஜெட் ஹோட்டலில் தீ: குழந்தையுடன் தப்பித்த தம்பதி

ஜார்ஜ் டவுன்: இங்குள்ள ஜாலான் உத்தாமாவில் உள்ள ஒரு பட்ஜெட் ஹோட்டலில் அறைக்கு முன்பாக  ஏற்பட்ட தீயில் இளம் தம்பதியினர் தங்கள் ஆண் குழந்தையுடன் சரியான நேரத்தில் தப்பினர்.

செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) ஒரு அறிக்கையில் பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

20 வயதுடைய தம்பதியர் மற்றும் அவர்களின் குழந்தை சுவாசிப்பதில் சிரமத்தை எதிர் நோக்கியதால் அவர்களை சிகிச்சைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

ஹோட்டல் கட்டிடத்தின் மற்ற அறைகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்த தீயணைப்பு குழுவினருக்கு சுமார் 10 நிமிடங்கள் எடுத்தது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து திணைக்களம் விசாரித்து வருகிறது. மேலும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.- பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here