துரித உணவகத்தில் சண்டை : ஓட்டுநர் கைது

கோம்பாக்: ராவாங்கில் உள்ள ஒரு துரித உணவு விடுதியில் நடந்த சண்டையில் ஈடுபட்ட ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஓட்டுநரை விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மனநல குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கோம்பாக் ஓசிபிடி  ஆரிஃபாய் தாராவே வியாழக்கிழமை (அக். 1) தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.

ஓட்டுநர் உணவகத்தில் தொழிலாளர்களைத் தாக்கியபோது சண்டை தொடங்கியது என்று அவர் கூறினார். சண்டையில் டிரைவர் மற்றும் இரண்டு உணவக ஊழியர்கள் ஈடுபட்டனர்  என்று அவர் கூறினார்.

செப்டம்பர் 27 அன்று நடந்த சண்டையின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வந்துள்ளது. முன்னதாக, பணம் செலுத்தும் முறை தொடர்பாக ஓட்டுநருக்கும் உணவக ஊழியருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்குப் பின்னர் ஒரு சச்சரவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த இடத்திலிருந்து ரகசிய கேமிரா காட்சிகள் குறித்து  விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பொருட்களை  சேதப்படுத்தியதாக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 447 மற்றும் 427 ன் கீழ் காவல்துறையினர் வழக்கை மறுவகைப்படுத்தியுள்ளனர் ஏஎஸ்பி ஆரிஃபாய் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here