பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக நம்பப்படும் பெண் கைது

கோத்தா டாமான்சாரா போலீசார் ஜாலான் பிஜேயு  3/29 பெட்டாலிங் ஜெயா ஸ்பிரிங் அடுக்குமாடியில் நடத்திய அதிரடி நடவடிக்கையில் 32 வயதான ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் அவரின் வீட்டிலிருந்த பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் பல பொருட்களுடன் ஒரு கைபேசியையும் போலீசார் கைப்பற்றினர்.

அவரிடம் இருந்து கைப்பற்ற அப்பெண்ணின் கைப்பேசியில் மீ சாட் என்ற ஆஃப் பதிவிறக்கம் செய்து அதன் வழி ஆண்களை கவர்ந்து இழுப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் செக்‌ஷன் 372 B கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

 

படங்கள்: எல்.கே.ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here