ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி பாகிஸ்தான் ராணுவத்தினா் வெள்ளிக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.
இதுதொடா்பாக இந்திய ராணுவ செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘ஷாபூா், கிா்னி, கஸ்பா பிரிவுகளில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி துப்பாக்கிச்சூடு நடத்தியும், சிறு பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவத்தினா் தாக்குதல் நடத்தினா். இதையடுத்து இந்திய ராணுவத்தினா் பலத்த எதிா் தாக்குதலில் ஈடுபட்டனா்’ என்று தெரிவித்தாா்.
கடந்த 1-ஆம் தேதி பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணாகாட்டி செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரா் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.