வடக்கு திரிபுரா பகுதியான காஞ்சன்பூரில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த அக்டோபர் 24-ம் தேதி அஞ்சன் நாமா (35) நபர் உள்பட இரண்டு பேர் 90 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமைச் செய்ததாக வழக்க பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு நபர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை.
விசாரணை துவங்கப்பட்டுள்ளதாக காஞ்சன்பூர் காவல் துறை அதிகாரி பிக்ரம்ஜித் சுக்லதாஸ் தெரிவித்துள்ளார்.
அந்த 90 வயது மூதாட்டியின் தகவல்படி “அஞ்சன் என்ற நபரும், மற்றொரு நபரும் நள்ளிரவில் என் வீட்டில் வந்தனர். என் உயிர் போகும் அளவு பாலியல் வன்கொடுமைச் செய்தனர். எனக்கு மீண்டும் அடுத்த நாள் காலையிலேயே நினைவு திரும்பியது. நான் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் இது பற்றித் தெரிவித்தேன். அஞ்சன் மிகப் பிரபலமான நபர் என்பதால், இது பற்றி புகார் அளிக்க அச்சமாக இருந்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை தரப்பில், உடல் பரிசோதனை செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், இது பற்றி இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில், நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேஷ மாநிலம் ஹத்ராஸ் சம்பவம், தெலுங்கான மாநிலம் கால்நடை மருத்துவர் என்று அடுக்கடுக்கான நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.