44,000 க்கும் மேற்பட்ட மக்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கான வேலைகளைக் கண்டுபிடிக்க அரசாங்கம் எடுத்த பல முயற்சிகள் தொடர்கின்றன.
மறு வேலைவாய்ப்புத் திட்டம் அல்லது MYFutureJobs போர்ட்டல் மூலம் பலருக்கு புதிய வேலைகள் கிடைத்ததாக துணை மனித வளத்துறை அமைச்சர் அவாங் ஹாஷிம் தெரிவித்தார்.
அக்டோபர் 30 ஆம் தேதி 541 முதலாளிகள் பங்கேற்ற ஒரு நாள் சொக்ஸோ கார்னிவல் பெஞ்சானாவில் 4,000 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலை கிடைத்ததாக அவாங் கூறினார்.
அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் பிற முயற்சிகளில் ஒரு கட்டமைக்கப்பட்ட வேலைவாய்ப்புத் திட்டம், உதவித்தொகை திறமை ஈர்ப்பு , தக்கவைப்பு திட்டம், மைஆப்ரெண்டிஸ் பணியமர்த்தல் ஊக்கத் திட்டம், மேம்பாட்டு, மறுசீரமைப்பு பயிற்சி திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
பொதுச் சேவை ஆணையம் , பொது சேவைத் துறையுடன் தொடர்புகொள்வதன் மூலம் அரசு நிறுவனங்களில் வேலை தேடுவோருக்கு நாங்கள் உதவுகிறோம் என்றார் அவர்.
தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 500,000 வேலை வாய்ப்புகள் உள்ளன என்று அவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் கேள்விக்குப் பதில் அளித்தார்.
வேலையின்மை பிரச்சினைக்கு தீர்வு காண அரசு தனியார் துறையுடன் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவாங் கூறினார். தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
சமீபத்திய அறிக்கையில், உலக பொருளாதார மன்றம் தரவு நுழைவு, கணக்கியல், புத்தக பராமரிப்பு, ஊதிய மேலாண்மை, நிர்வாகம், வணிக சேவைகள் தணிக்கை போன்ற பல தொழிலாளர்கள் தேவைப்படாத 10 துறைகளை கோடிட்டுக் காட்டியது.
டிஜிட்டல் உருமாற்ற வல்லுநர்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற புதிய வேலைகளை உருவாக்குவதை நாங்கள் பார்க்கிறோம் என்றார் அவர்.