நிலச்சரிவில் இருவர் புதையுண்டிருக்கலாம் என ஐயம்

ஈப்போ-

பேராக் தீயணைப்பு மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர், அதிகாலை 1.28 மணியளவில் ஹோட்டலின் அருகே நிகழந்த நிலச்சரிவில் ஒரு ஆண்  பெண் ஆகிய இருவர் புதையுண்ட சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து ஒரு அழைப்பு வந்தவுடன் மீட்பு பணிக்காக ஈப்போ தீயணைப்பு  மீட்பு நிலையத்திலிருந்து ஒரு குழுவை உடனடியாக கடமையில் இறங்கியதாக  அவர் இன்று இங்கே  அறிக்கையில் தெரிவித்தார்.

இப்போது வரை தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், சம்பவ இடத்தில் பலியான இருவருக்கும் சொந்தமானது என நம்பப்படும் இரண்டு ஜோடி விளையாட்டு காலணிகளையும் அவர்கள் கண்டதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here