சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
அந்த இழப்புகள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. தடுப்பு மருந்துகள் இன்னும் முழுமையடையவில்லை.
இதில் உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் ஸ்பெயின் இப்ப்போது 6- ஆவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ஸ்பெயினில் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 43 ஆயிரத்து 131 ஆக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.