இது, தொலைதொடர்பு சேவைகளுக்கு போதுமான எண்ணிக்கையிலான இடத்தை உருவாக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த பரிந்துரையை மத்திய தொலைதொடர்பு துறை இப்போது ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை அந்த துறை கடந்த 20- ஆம்தேதி வெளியிட்டுள்ளது.
தரைவழி தொலைபேசியில் இருந்து வாடிக்கையாளர்கள் செல்போன் எண்களை அழைத்து பேசுவதற்காக ‘0’ சுழற்சி வசதி (எஸ்.டி.டி. வசதி) வழங்கப்பட வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள், தரைவழி தொலைபேசி சந்தாதாரர்களுக்கு செய்து தருவதற்கு ஜனவரி 1- ஆம் தேதி வரையில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே இந்த புதிய நடைமுறை ஜனவரி 1- ஆம் தேதி நடைமுறைக்கு வரும்.