லண்டன்:
அஸ்ட்ராஜெனெகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய விலை மலிவான, சுலபமாக தயாரிக்கக்கூடிய கொரோனா வைரஸ் தடுப்பூசி 90 சதவீதம் வரை பயனுள்ளதாக இருக்கும் என சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
அது மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. இந்த தடுப்பூசிக்கு ஒரு கப் காபிக்கு குறைவாகவே செலவாகும் என்று குறிப்பிட்டு, இங்கிலாந்து ஊடகங்கள் கொண்டாடின.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கோவிட் தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளவை எனக்கூறிய சில நாட்களுக்குப் பிறகு, அஸ்ட்ராஜெனெகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்டு உள்ள உற்பத்திப் பிழையை ஒப்புக் கொண்டுள்ளன.
இது அவர்களின் சோதனையில், கொரோனா தடுப்பூசியின் ஆரம்ப முடிவுகள் குறித்த கேள்விகளை எழுப்பியது.
நவம்பர் 23 ஆம் நாள் பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து தயாரிப்பாளரான அஸ்ட்ராஜெனெகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், தாங்கள் உருவாக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி 70.4 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியது.
சராசரியாக கொரோனாவைத் தடுப்பதில், அதன் மருத்துவ பரிசோதனைகள் இங்கிலாந்து , பிரேசிலில் நடத்தப்பட்டன.
அஸ்ட்ராஜெனெகா கூறுகையில், ஆச்சரியமாக இரண்டு முழு டோஸ்களை பெற்ற தன்னார்வலர்களைக் காட்டிலும் குறைந்த டோஸ்களை பெற்ற தன்னார்வலர்களின் குழு மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக தோன்றியது. குறைந்த டோஸ்கள் பெற்ற குழுவில் தடுப்பூசி 90 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது.
இரண்டு முழு டோஸ்களை பெற்ற குழுவில் தடுப்பூசி 62 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது எனக் கூறியுள்ளது.
மிகப் பெரிய கேள்வி என்னவென்றால், தடுப்பூசியின் செயல்திறனில் வெவ்வேறு டோஸ்களில் ஏன் இவ்வளவு பெரிய மாறுபாடு இருந்தது, மேலும் ஒரு சிறிய டோஸ் ஏன் சிறந்த முடிவுகளைத் தோற்றுவித்தது?
அஸ்ட்ராஜெனெகா , ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் தங்களுக்குத் தெரியாது என்றும் கூறினர்.
அஸ்ட்ராஜெனெகாவின் செய்தித் தொடர்பாளர் மைக்கேல் மீக்செல் கூறுகையில், சோதனைகள் மிக உயர்ந்த தரத்திற்கு நடத்தப்பட்டன என்றார்.
நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் பெரும்பகுதிக்கு பொறுப்பான அஸ்ட்ராஜெனெகா நிர்வாகி மெனெலஸ் பங்கலோஸ், நிறுவனத்தின் சோதனை மற்றும் அதன் பொது வெளிப்பாடுகளை கையாள்வதை பாதுகாத்தார்.
டோஸ்களில் பிழை ஒரு ஒப்பந்தக்காரரால் ஏற்பட்டது. அது கண்டுபிடிக்கப்பட்டவுடன் கட்டுப்பாட்டாளர்களுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு, தடுப்பூசியை வெவ்வேறு அளவுகளில் தொடர்ந்து பரிசோதிக்கும் திட்டத்தில் கையெழுத்திட்டதாக அவர் கூறினார்.
முடிவுகள் தெளிவாக இல்லை என்று அமெரிக்காவில் உள்ள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தடுப்பூசியின் மிகவும் நம்பிக்கைக்குரிய முடிவுகள் வயதானவர்களிடமிருந்து தரவைப் பிரதிபலிக்கவில்லை என்பதை முதலில் வெளிப்படுத்தி உள்ளனர்.
புளோரிடா பல்கலைக்கழகத்தின் உயிரியல் ஆய்வாளரும் தடுப்பூசி சோதனை வடிவமைப்பில் நிபுணருமான நடாலி டீன் கூறுகையில், அஸ்ட்ராஜெனெகா, ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை முடிவுகளுக்கு வரும்போது, வெளிப்படைத் தன்மைக்கு ஒரு மோசமான தரத்தைப் பெறுகின்றன என்று கூறினார்.
இந்நிலையில், தடுப்பூசி குறித்து சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், உலகளவில் மீண்டும் சோதனையைப் புதிதாக தொடங்கவிருப்பதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பாஸ்கல் சோரியட் தெரிவித்துள்ளார்.