திமிங்கலம் எடுத்த வாந்தியால் ஏழை மீனவர் கோடீஸ்வரர் ஆனார்!

பரம ஏழையான மீனவர் ஒருவர் கடலில் கிடந்த பொருளால் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆனார் என்பது கதையல்ல. உண்மைச் சம்பவம். 

தாய்லாந்து நாட்டில் தென் பகுதியைச் சேர்ந்தவர் நரிஸ்(60). மீனவரான இவருக்கு சுமார் 100 கிலோ அளவுக்கு திமிங்கலம் எடுத்த வாந்தி ஒன்று கிடைத்துள்ளது.

அம்பெர்கிரிஸ் என்று சொல்லப்படும் இந்த பொருளானது மிதக்கும் தங்கம் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏழையான மீனவர் நரிஸ் ஒருநாள் மாலை நேரம் தமது வீட்டில் இருந்து பக்கத்தில் உள்ள கடற்கரை பகுதியில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது வழியில் ஒரு பகுதியில் பாறை போன்ற வெளிர் நிற கட்டிகள் கரை ஒதுங்கி கிடந்துள்ளது. இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் தமது உறவினர் உதவியுடன் அப்பொருளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

ஆனால், அது என்னவென்று தெரியாத அந்த மீனவர் சிலரிடம் விசாரித்தபோது கிடைத்திருப்பது மிதக்கும் தங்கங்கள் என்பதை அறிந்துள்ளார்.

சுமார் 100 கிலோ எடையுள்ள அந்த அம்பேர்கிரிஸ் கட்டிகளை தொழிலதிபர் ஒருவர் அதற்கு ஏற்றார்போல கிலோவுக்கு 23,740 பவுண்டுகள் விலைபேசி கொடுப்பதாக மீனவரிடம் கேட்டுள்ளார்.

மாதம் 500 பவுண்டுகள் கூட கிடைக்காத பரம ஏழையான மீனவருக்கு தற்போது சுமார் 2.6 மில்லியன் பவுண்டுகள் கிடைக்கப்போகிறது.

அதனுடைய மதிப்பு அதிகம் என்பதால்  திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.  இதனால் நரிஸ் காவல்துறையின் உதவியை நாடியுள்ளார்.

கமெண்ட்: ஆண்டவன் கொடுப்பதை மனுஷனால் தடுக்க முடியாது. ஆனால் மனுஷனால் கெடுக்க முடியும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here