வாஷிங்டன்:
ஆனால், தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து வரும் டிரம்ப், மேற்கூறிய முக்கிய மாகாணங்களில் முறைகேடுகள் செய்து ஜோ பிடன் வெற்றி பெற்றதைக் குற்றம் சாட்டுகிறார்.
எனவே, டிரம்பின் பிரசாரக்க் குழு அந்தந்த மாகாணங்களின் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வலியுறுத்தி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. எனினும் இந்த வழக்குகளில் டிரம்ப் தரப்பு தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.
அந்தவகையில் அரிசோனா, விஸ்கான்சின் மாகாணங்களில் நடத்தப்பட்ட மறுவாக்கு எண்ணிக்கையில் ஜோ பிடன் வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த இரு மாகாண அரசுகளும் ஜோ பிடன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அவருக்கு வழங்கியுள்ளது.
விஸ்கான்சின் மாகாணத்தில் ஜோ பிடன் டிரம்பை விட 20 ஆயிரத்து 700 ஓட்டுகளையும், அரிசோனா மாகாணத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.