துபாய்:
இப்பயணம் 10 நாட்கள் பாலைவனம் வழியாக நடைபெறும். வருகிற 8- ஆம் தேதி துபாய் குளோபல் வில்லேஜில் அமைந்துள்ள பாரம்பரிய கிராமத்தில் நிறைவடைகிறது. இந்த பாலைவன பயணத்தின் மொத்த தூரம் 550 கிலோ மீட்டர் ஆகும். பாலைவன ஒட்டகப் பயணத்தில் அமீரகம், செக் குடியரசு, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா, தென் ஆப்பிரிக்கா , ஸ்பெயின் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த 11 பேர் பங்கேற்பர்.
இது குறித்து துபாய் ஹம்தான் பின் முகம்மது பாரம்பரிய மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தற்போது உள்ள நவீன தொழில்நுட்ப யுகத்தில் அமீரகத்தின் பாரம்பரிய வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ள உதவும் வகையில் இந்த ஒட்டக பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் முதலில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் கலந்து கொள்பவர்களின் உடல் நலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. அதன்பிறகு இந்த பயணத்தில் பங்கேற்பவர்கள் இறுதியாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதையடுத்து அவர்களுக்கு பாலைவனத்தில் ஒட்டகத்தின் மூலம் பயணம் செய்யக்கூடிய வகையில் போதுமான பயிற்சி வழங்கப்படுகிறது.
அமீரகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் ஆர்வத்துடன் இந்த பயணத்தில் பங்கேற்க விரும்புவது குறிப்பிடத்தக்கது.