கொரோனா வைரஸ் ஆனது உலகெங்கும் அச்சுறுத்தி வந்தாலும், தற்போது புயல் உருவாகி தமிழகத்தையே புரட்டிப் போட்டுவருகிறது. இந்த நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றியைக் கண்டுள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கும் வகையிலான புதிய சட்டத்துக்கு ஜப்பான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், புதிய சட்டத்தின்படி ஜப்பானில் உள்ள 126 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஆகும் செலவை அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசரிலிருந்து 60 மில்லியன் மக்களுக்கும், பயோடெக் நிறுவனமான மாடர்னாவிலிருந்து 25 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை ஜப்பான் பெற்றுள்ளது.
மேலும், 120 மில்லியன் டோஸ் ஆஸ்ட்ராசென்கா தடுப்பு மருந்தை பெறவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமெண்ட்: மக்கள் நலன் இல்லாமல் நாட்டுக்கு நன்மைகள் இல்லை . சுகாதாரம் மட்டுமே முதன்மை மூலாதாரம்.